search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏகனாபுரத்தில் 3 மாதத்தில் மூன்று ஆவணங்கள் மட்டும் பதிவு
    X

    ஏகனாபுரத்தில் 3 மாதத்தில் மூன்று ஆவணங்கள் மட்டும் பதிவு

    • விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் எல்லைக்குட்பட்ட நிலங்களை பதிவு செய்வதற்கு எந்த பதிவு நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்படவில்லை.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,750 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்காக குடியிருப்பு நிலம், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், மேலேறி, நாகப்பட்டு, நெல்வாய், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரப்பதிவு துறையின் சார்பில் வெளியிட்ட தகவலில், பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைய உள்ளதால் சுற்றி உள்ள 13 கிராம பகுதிகளில் உள்ள இடங்களை வாங்கவோ, விற்கவோ, தான செட்டில்மென், அடமானம் போன்ற பத்திரபதிவுக்கு தடையில்லா சான்று பெற்ற பின்னரே பத்திரப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே ஏகனாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏகனாபுரம் கிராம பகுதிக்குட்ட நன்செய், புன்செய், கிராம நத்தம் ஆகியவற்றில் அடங்கியிருக்ககூடிய சர்வே எண்கள் கொண்ட எந்த நிலத்தையும் கிரையமோ, தான செட்டில்மென்ட்டோ, பாகப்பிரிவினை, அடமானம் போன்ற எல்லாவித பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எதற்காக? அந்த உத்தரவை பிறப்பித்த அரசு அதிகாரியின் விவரம், அதற்கான நகல், எந்த தேதியில் இருந்து ஏகனாபுரம் பகுதியில் பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை கேட்டு இருந்தார்.

    இதற்கு அதிகாரிகள் அளித்து உள்ள பதிலில், ஏகனாபுரம் எல்லைக்குட்பட்ட நிலங்களை பதிவு செய்வதற்கு எந்த பதிவு நடவடிக்கையும் நிறுத்திவைக்கப்படவில்லை. எந்த அதிகாரிகளிடம் இருந்தும் அந்த உத்தரவானது வரவில்லை.1.09.22 முதல் 28.12.022 வரை மூன்று ஆவணங்கள் பதிவாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×