search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கம் அருகே அரிய வகை திமிங்கலம் வயிற்றில் குட்டியுடன் இறந்து கரை ஒதுங்கியது
    X

    கல்பாக்கம் அருகே அரிய வகை திமிங்கலம் வயிற்றில் குட்டியுடன் இறந்து கரை ஒதுங்கியது

    • கடற்கரையோரங்களுக்கு வரும் ஆமைகள் குறித்து கணக்கெடுத்து அதனை பாதுகாத்து வருகின்றனர்.
    • திமிங்கலம் மற்றும் அதன் குட்டி அங்கேயே மணலில் புதைக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை நீலாங்கரையில் செயல்படும் 'டிரி பவுண்டேசன்' தொண்டு நிறுவனம் ஆமைகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடற்கரையோரங்களுக்கு வரும் ஆமைகள் குறித்து கணக்கெடுத்து அதனை பாதுகாத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த கடல் ஆமைகள் பாதுகாப்பு காவலர்களான பாண்டியன் மற்றும் சுதாகர் ஆகியோர் அதிகாலையில் கல்பாக்கம் அருகே உள்ள பெருந்துரவு கடற்கரை பகுதியில் கண்காணித்தனர்.

    அப்போது சுமார் 7 அடி நீளமுள்ள அரியவகை திமிங்கலம் ஒன்று காயத்துடன் கரை ஒதுங்கி கிடந்ததை பார்த்தனர். இது குறித்து அவர்கள் வண்டலூர் பூங்கா அதிகாரிகளுக்கும வனத்து றையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து திமிங்கலத்தின் உடலை அங்கேயே பரிசோதித்தனர். அப்போது அந்த திமிங்கலத்தின் வயிற்றில் குட்டி திமிங்கலம் இறந்த நிலையில் இருந்தது.

    அதன் மூக்கு மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதனால் இது இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. பின்னர் அந்த திமிங்கலம் மற்றும் அதன் குட்டி அங்கேயே மணலில் புதைக்கப்பட்டது.

    இது குறித்து டிரி பவுண்டேசன் அமைப்பை சேர்ந்த முனைவர் சுப்ரஜா தாரணி கூறும்போது, 'கல்பாக்கம் அருகே உள்ள பெருந்துரவு கடற்கரை பகுதியில் வயிற்றில் குட்டியுடன் திமிங்கலம் இறந்து கிடந்தது. அதன் உடலில் காயம் இருந்தது.

    மீனவர்களின் வலையில் சிக்கியதால் அல்லது படகுகள் மோதியதில் காயம் அடைந்து இருக்கலாம். மற்ற திமிங்கலத்தை விட இது சிறியதாக இருக்கிறது. இது அரியவகை ஆகும்' என்றார்.

    Next Story
    ×