search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமாபுரத்தில் இளம்பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு
    X

    ராமாபுரத்தில் இளம்பெண்ணை தாக்கி செல்போன் பறிப்பு

    • வாலிபர் திடீரென சுகுணாவை தலையில் தாக்கி அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டான்.
    • ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை ராமாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சுகுணா. இவர் நேற்று இரவு பணி முடிந்து அதே பகுதி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் திடீரென சுகுணாவை தலையில் தாக்கி அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×