search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி கணக்கை முடக்கப்போவதாக கூறி ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ. 2.23 லட்சம் அபேஸ்
    X

    வங்கி கணக்கை முடக்கப்போவதாக கூறி ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ. 2.23 லட்சம் அபேஸ்

    • இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் நூதனமாக பணம் திருடிய மர்மநபரை தேடி வருகிறார்கள்.
    • மோசடிகள் நடப்பது பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை கிராமத்தை சேர்ந்தவர் ஹமீது களஞ்சியம்(வயது 32). இவர் ராமநாதபுரத்தில் ஆவண எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு குறுந்த தகவல் வந்தது. அதில் தங்களது வங்கி கணக்கு முடக்கப்போவதாகவும், அதை தவிர்க்க பான் கார்டு விவரங்கள் கொடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஹமீது களஞ்சியம் உடனே குறிப்பிட்ட எண்ணில் இருந்து வந்திருந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் குறிப்பிட்ட இணையதளத்தில் தனது வங்கி விவரம், பான்கார்டு விவரம் ஆகியவற்றை பதிவேற்றியுள்ளார். அப்போது அவர் செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்துள்ளது. அதையும் பதிவேற்றிவிட்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஹமீது களஞ்சியத்தின் வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளாக மொத்தம் ரூ.2 லட்சத்து 23 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் நூதனமாக பணம் திருடிய மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    எந்த ஒரு வங்கியும் வாடிக்கையாளரிடம் போனில் தகவல்களை கேட்பதில்லை வங்கி நிர்வாகங்கள் அறிவுத்துள்ளது. அவ்வாறு யாரேனும் போனில் வங்கி கணக்கு குறித்த தகவல்களை கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும், ஓ.டி.பி. எண்களை யாரிடம் பகிராமல் கவனமாக கையாளவேண்டும் எனவும் காவல்துறையும், வங்கி அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

    ஆனாலும் இது போன்ற மோசடிகள் நடப்பது பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததையே காட்டுகிறது.

    Next Story
    ×