search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புழல் ஜெயிலில் கொலை வழக்கில் கைதான கைதி திடீர் மரணம்
    X

    புழல் ஜெயிலில் கொலை வழக்கில் கைதான கைதி திடீர் மரணம்

    • சர்புதீன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு வந்தார்.
    • கடந்த 15-ந் தேதி சர்புதீனை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    செங்குன்றம்:

    கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட ராமலிங்கம் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ., அதிகாரிகளால் சர்புதீன் (வயது 62) என்பவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சர்புதீன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து கடந்த 15-ந் தேதி சர்புதீனை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சர்புதீன் இறந்தார். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×