என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே மனைவியுடன் தகராறில் கணவர் தற்கொலை
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனவேதனை அடைந்த ரபி வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லீம் நகரை சேர்ந்தவர் ரபி (வயது 23). தொழிலாளி. இவரது மனைவி ஆயிஷா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ரபி வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






