என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மதிராசம்மா அணிந்து இருந்த நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.
- பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரியை அடுத்த பெரும்பேடு லிங்கபையன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ்.அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதிராசம்மா (62). கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்த அவர் வெளியில் உள்ள பொருட்களை எடுக்க வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மதிராசம்மா அணிந்து இருந்த 5½ பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






