என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் லோக் அதாலத் மூலம் 1 கோடியே 55 லட்சத்து 61,500 இழப்பீடு வழங்கப்பட்டன
- பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன.
- முகாமில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் முதன்மை சார்பு நீதிமன்றம் கூடுதல் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நீதிமன்றங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் லோக் அதாலத் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வண்ணமலர் குற்றவியல் நீதிபதிகள் மோகனப்பிரியா, ஐயப்பன், முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிவில் வழக்குகள் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் நில ஆர்ஜித வழக்குகள் கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் மொத்தம் 100 வழக்குகளில் 30 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, பொன்னேரி மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் 1 கோடியே 55 லட்தத்து 61 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்து இழப்பீடு வழங்கப்பட்டன. முகாமில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






