என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜீப்பில் எடுத்து வரப்பட்ட துப்பாக்கி-கத்திகளை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார்
    X

    ஜீப்பில் எடுத்து வரப்பட்ட துப்பாக்கி-கத்திகளை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார்

    • ஜீப்பின் ஆவணங்களை சரிபார்த்த போலீசார், ஜீப்பின் நம்பர் பிளேட்டில் இருந்த ஜீ என்ற ஆங்கில எழுத்தினை மறைத்தனர்.
    • சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் வரை அகற்றக்கூடாது என கூறி ஜீப்பையும், அதில் வந்தவர்களையும் அனுப்பி வைத்தனர்.

    திண்டிவனம்:

    சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு அந்த வழியாக ஜீப் ஒன்று வேகமாக வந்தது. அதனை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்தினர்.

    அந்த ஜீப்பின் நம்பர் பிளேட்டில் அரசு வாகனத்தை குறிக்கும் ஜீ என்ற ஆங்கில எழுத்தும், போலீஸ் என்றும் பதிக்கப்பட்டிருந்ததை போலீசார் பார்த்தனர்.

    ஆனால், அதிலிருந்த நபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தனர். தொடர்ந்து ஜீப்பை போலீசார் சோதனையிட்டனர். அதில் 25-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், 50-க்கும் மேற்பட்ட கத்திகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    ஜீப்பில் உள்ளவர்கள் பயங்கரவாதிகளாக இருப்பார்களோ என்று அஞ்சிய போலீசார், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வி, அன்னக்கொடி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் கூடுதல் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஜீப்பில் இருந்த துப்பாக்கிகளை எடுத்து பார்த்தபோது அவைகள் மரத்தால் செய்யப்பட்ட டம்மி துப்பாக்கி என்பதும், அதிலிருந்த கத்தி அட்டைகளால் செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் ஜீப்பில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் திரைப்பட சூட்டிங்கிற்கு டம்மி, துப்பாக்கி, கத்தி எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.

    அந்த ஜீப்பின் ஆவணங்களை சரிபார்த்த போலீசார், ஜீப்பின் நம்பர் பிளேட்டில் இருந்த ஜீ என்ற ஆங்கில எழுத்தினை மறைத்தனர். மேலும், போலீஸ் என்று எழுதப்பட்டிருந்ததையும் மறைத்தனர்.

    சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் வரை இதனை அகற்றக்கூடாது என கூறி ஜீப்பையும், அதில் வந்தவர்களையும் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×