என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாய்க்கு உணவளிக்காமல் வீட்டை விட்டு துரத்திய மகன், மருமகள் மீது வழக்கு
- பழனிவேல் தனது தாய் அசோதைக்கு சாப்பாடு போடாமல் ஜீவனாம்சம் தராமல் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்.
- அசோதை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே நடுவீரப்பட்டு பெரிய நரிமேடு சேர்ந்தவர் அசோதை (வயது 85). இவரது மகன் பழனிவேல் (வயது 50). இந்த நிலையில் பழனிவேல் தனது தாய் அசோதைக்கு சாப்பாடு போடாமல் ஜீவனாம்சம் தராமல் அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்.
இது குறித்து தாய் அசோதை தனது மகன் பழனிவேல் (வயது 50), மருமகள் உஷா (வயது 42) ஆகியோர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






