என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் 15 வயது சிறுமிக்கு திருமணம்: கணவர்-பெற்றோர் மீது வழக்கு
- 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.
- சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூரை சேர்ந்தவர் கணபதி(வயது 22). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர் 15 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு 2 பேரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த மே மாதம் 26-ந்தேதி திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகி உள்ளார். தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருக்கும் அந்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி சீதபற்பநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணபதி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 2 பேரின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்