search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர், முதல்வர், ஆளுநர் வருகை- காந்திகிராம பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்
    X

    பிரதமர், முதல்வர், ஆளுநர் வருகை- காந்திகிராம பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

    • பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக் கழகத்தில் செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
    • விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளமான ஹெலிபேடு, அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதைக்கான வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல்-மதுரை4 வழிச்சாலையில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், தமிழக அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக் கழகத்தில் செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளமான ஹெலிபேடு, அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதைக்கான வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    தற்போது பல்நோக்கு அரங்கத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பால்சீலிங் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அரங்கத்தில் மேற்கு பகுதியில் விழாவில் பங்கேற்பவர்களுக்கான தனி பந்தல்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் மற்றும் முக்கிய அலுவலகங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    விழாவிற்கு வரும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் விழா மேடையில் இடம்பெற வேண்டிய பேனர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

    பட்டமளிப்பு விழா நடைபெறும் 11ம் தேதியன்று பல்கலைக் கழக நுழைவாயில் முன்பு முதல் வளாகம் முழுவதும் பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். அன்றைய தினம் பல்கலைக் கழக வளாகத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.

    Next Story
    ×