search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி மரணம்
    X

    பொன்னேரி அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி மரணம்

    • மாணவி ஹரிணிகாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
    • தங்கி இருந்த மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    திருவாரூரை சேர்ந்தவர் ஹரிணிகா (வயது16). இவர் பொன்னேரியை அடுத்த ஆண்டார்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்

    கடந்த 3 நாட்களாக மாணவி ஹரிணிகாவுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி இருந்து வந்தது. இந்தநிலையில் அவருக்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது.

    இதையடுத்து அவரை செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி ஹரிணிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது உடன் தங்கி இருந்த மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவி ஹரிணிகாவின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மாணவியின் திடீர் சாவு குறித்து கவரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×