என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷ மாத்திரை தின்று தற்கொலை
    X

    பெருந்துறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் விஷ மாத்திரை தின்று தற்கொலை

    • திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் செல்லப்பம்பாளையம் கிழக்கு புதூர் காலனி பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவர் சிவகிரியை சேர்ந்த நவீன் குமார் என்பவைரை கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் திவ்யாவின் தாய், அண்ணன் மற்றும் அக்கா ஆகியோர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர். இதனால் திவ்யா மனவேதனையில் இருந்து வந்த நிலையில் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இருவரும் பிரிந்து வாழ்வதென முடிவு எடுத்து திவ்யா கணவரை பிரிந்து தந்தை பழனிச்சாமியுடன் கிழக்கு புதூர் காலனியில் வசித்து வந்தார்.

    ஏற்கனவே தாய், அண்ணன் மற்றும் அக்காவை இழந்த நிலையில் தற்போது கணவரையும் பிரிந்து விட்டதால் கடந்த சில நாட்களாக திவ்யா மனவேதனையில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பத்தன்று தற்கொலை செய்ய முடிவு எடுத்த திவ்யா வீட்டில் இருந்த சல்பாஸ் (விஷ) மாத்திரையை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதனால் வயிற்று வலியால் அவர் துடித்தார்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த திவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×