search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியபாளையம் அருகே விளையாட்டு வினையானது: ஆசனவாயிலில் கம்ப்ரசரை வைத்ததால் வாலிபர் பலி
    X

    பெரியபாளையம் அருகே விளையாட்டு வினையானது: ஆசனவாயிலில் கம்ப்ரசரை வைத்ததால் வாலிபர் பலி

    • விளையாட்டாக பிரியரஞ்சன் சாகுவின் ஆசன வாயிலில் கம்ப்ரசரை நுழைத்தார்.
    • பிரியரஞ்சன் சாகுவை மீட்டு பாடியநல்லூரில் உள்ளதனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியரஞ்சன் சாகு பரிதாபமாக இறந்தார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஜெயபுரம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரியரஞ்சன் சாகு(வயது23) என்பவர் ஹெல்பராக பணியில் சேர்ந்தார். இவர் குனிந்து அங்கிருந்த எந்திரங்களை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சூப்பர்வைசரான ஆந்திர மாநிலம் பத்ராவரம் பகுதியைச் சேர்ந்த சாய்ராகவ்(22) என்பவர் விளையாட்டாக பிரியரஞ்சன் சாகுவின் ஆசன வாயிலில் கம்ப்ரசரை நுழைத்தார்.

    இதில் அதிவேகமாக வந்த காற்று பிரியரஞ்சன் சாகுவின் வயிற்றுக்குள் சென்றது. உடனே அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் பிரியரஞ்சன் சாகுவை மீட்டு பாடியநல்லூரில் உள்ளதனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியரஞ்சன் சாகு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்பார்வையாளர் சாய் ராகவ்வை கைது செய்தனர். பின்னர் அவரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். விளையாட்டாக செய்த செயல் வாலிபரின் உயிரை பறித்து விட்டது.

    Next Story
    ×