search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் அருகே கோவிலை இடிக்க சென்ற போது சாமியாடிய பெண்ணால் பரபரப்பு
    X

    வண்டலூர் அருகே கோவிலை இடிக்க சென்ற போது சாமியாடிய பெண்ணால் பரபரப்பு

    • கோவிலை இடிக்கும் பணியை தொடங்கியபோது திடீரென்று கோவிலில் இருந்த முருகம்மாள் என்ற பெண் சாமியார் அருள் வந்து சாமியாடினார்.
    • சாமியாடிய பெண் மிகவும் ஆவேசமாக காணப்பட்டார்.

    வண்டலூர்:

    வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கொளப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு திருநங்கைகள் சிலர் காளி கோவில் அமைத்து சில வருடங்களாக வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த கோவில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் இருப்பதாக கூறி அரசு அதிகாரிகள் அதை அகற்றுவதற்காக சென்றனர். அப்போது அங்கிருந்த திருநங்கைகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

    ஆனால் அதை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவிலை இடிக்கும் பணியை தொடங்கியபோது திடீரென்று கோவிலில் இருந்த முருகம்மாள் என்ற பெண் சாமியார் அருள் வந்து சாமியாடினார்.

    சாமியாடிய பெண் மிகவும் ஆவேசமாக காணப்பட்டார். அவர் காளியம்மன், நாகாத்தம்மன், வீரபத்திரன் உள்ளிட்ட சாமி சிலைகள் மீது திடீரென்று மிளகாய் பொடி கலந்த நீரால் அபிஷேகம் செய்தார். கோவிலை இடிக்கும் அதிகாரிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று சாமியாரிடம் ஆவேசமாக வேண்டினார்.

    அதன்பிறகு அவர் மிளகாய் பொடி கலந்த தண்ணீரை தனது முகத்தின் மீது ஊற்றிக் கொண்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோவிலை இடிக்க வந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    நீண்டநேர ஆலோசனைக்கு பிறகு கோவிலின் மேற்கூரையை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    Next Story
    ×