search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை: இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்
    X

    புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை: இறைச்சி கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்

    • அதிகாலை முதலே காஞ்சிபுரம் மீன் சந்தையில் கடும் கூட்டம் காணப்பட்டது.
    • தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் அசைவ உணவை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிந்தது. இதைத்தொடர்ந்து இன்று புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஏராளமானோர் குவிந்தனர்.

    அதிகாலை முதலே காஞ்சிபுரம் மீன் சந்தையில் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் செயல்பட்டு வரும் மீன், இறைச்சி கடைகளில் கடந்த 5 வாரங்களாக விற்பனை குறைவாக நடந்த நிலையில் இன்று வழக்கம் போல் விற்பனை சூடுபிடித்தது.

    இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×