என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தேங்கி நிற்கும் மழைநீர்- நோயாளிகள் அவதி
- நோயாளிகள் மழைநீரை மிகவும் சிரமப் பட்டு கடந்து செல்கின்றனர்.
- ஆஸ்பத்திரியில் மழை நீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு மையம், நரம்பியல் சிகிச்சை பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகள் உள்ள பகுதியில் மழைநீர் வடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது.
நோயாளிகள் மழைநீரை மிகவும் சிரமப் பட்டு கடந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரியில் மழை நீர் தேங்காமல் உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story






