search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி நகராட்சியில் ரூ.54 லட்சம் வரிபாக்கி- குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவு
    X

    பொன்னேரி நகராட்சியில் ரூ.54 லட்சம் வரிபாக்கி- குடிநீர் இணைப்புகளை துண்டிக்க உத்தரவு

    • பொன்னேரி நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.
    • வரிபாக்கியை வசூலிக்க தெருக்ககளில் முகாமிட்டு பணியாளர்கள் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் உள்ள மொத்தம் 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.

    இவர்களில் பெரும்பாலானோர் 2022-23 ஆண்டிற்கான சொத்து வரியும், தொழில் வரி, குடிநீர் வரி, கடைவரி, வீட்டு வரி உள்ளிட்டவை இன்னும் செலுத்தாமல் உள்ளனர். அவர்களிடம் வரி வசூலிக்க நகராட்சி ஆணையாளர் கோபிநாத் உத்தரவின் படி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.54 லட்சம் வரை வரிபாக்கி இருப்பதாக தெரிகிறது. வரிபாக்கியை வசூலிக்க தெருக்ககளில் முகாமிட்டு பணியாளர்கள் மூலம் வரி வசூல் செய்யப்படுகிறது. மேலும் ஒலிப்பெருக்கி, துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்றும் வரிசெலுத்த அறிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கோபிநாத் கூறும்போது, 'வரி செலுத்தாதவர்களுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. குடிநீர் வரி செலுத்தாதவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், என்று எச்சரித்து உள்ளார்.

    Next Story
    ×