என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குரோம்பேட்டையில் வீடுகளை காலி செய்வதற்கு எதிர்ப்பு- 500 பெண்கள் மறியல்
- ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்க அதிகாரிகள் வந்தனர்.
- துர்கா நகர் மெயின்ரோட்டில் அதிகாரிகளை பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்:
குரோம்பேட்டை, இந்திரா நகரில் உள்ள பெரியார் தெரு, தண்டு மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் வீரராகவ பெருமாள் கோவில் ஏரியை சுற்றி சுமார் 314 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி, அதனை அகற்ற தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்க அதிகாரிகள் வந்தனர்.
அப்போது துர்கா நகர் மெயின்ரோட்டில் அதிகாரிகளை பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வழிமறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்