search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை நீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பிப்பு- கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
    X

    மழை நீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பிப்பு- கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வண்டலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை கொட்டியது.
    • தண்ணீரை வடிகால்வாய் அமைத்து அடையாறு ஆற்று படுகையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் பிரமாண்ட புறநகர் பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் வெளியூர் செல்லும் பஸ்களை நிறுத்தவும், பயணிகளுக்கும் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வண்டலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் பலத்த மழை கொட்டியது. அப்போது கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய பகுதி மற்றும் நுழைவுவாயில், ஜி.எஸ்.டி.சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் பஸ்நிலையத்தை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூர் மேம்பாலம், தாம்பரம் பைபாஸ்சாலை, திருப்போரூர்-வண்டலூர் சாலை, மண்ணிவாக்கம் இணைப்பு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 3 மணிநேரத்துக்கும் மேல் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    ஒரு நாள்மழைக்கே கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பகுதி மழைநீரில் தத்தளித்ததால் பொது மக்கள், வாகனஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இதைத்தொடர்ந்து கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலைய பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மழை நீர்கால்வாய் அமைப்பது குறித்த ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை நகராட்சிகளின் நிர்வாக இணை இயக்குனர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். பஸ்நிலைய கட்டுமான பணி மற்றும் மழைநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது,சி.எம். டி. ஏ. அதிகாரி சீனிவாச ராவ், செயற்பொறியாளர் ராஜன் பாபு, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    தண்ணீரை வடிகால்வாய் அமைத்து அடையாறு ஆற்று படுகையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×