என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே வடமாநில வாலிபர் மர்ம மரணம்
- மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
- பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேஷ்வர் செட்டி (வயது38) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தொழிற்சாலையின் பின்புறம் மர்மமான முறையில் மகேஷ்வர் செட்டி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






