என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாங்குநேரி அருகே கோவிலில் திருட முயன்ற வரை மடக்கி பிடித்த பொதுமக்கள்- போலீசில் ஒப்படைத்தபோது தப்பி ஓட்டம்
- அன்னபாண்டி தப்பி ஓடி விட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய அன்னபாண்டியை தேடி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இறைப்புவாரி பஞ்சாயத்துக்குட்பட்ட மாவடியில் சிவனைந்த பெருமாள் கோவில் உள்ளது.
சம்பவத்தன்று இரவில் இந்த கோவில் வளாகத்தில் மர்ம நபர் சுற்றி திரிந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் ஆக்சா பிளேடு, கத்தி ஆகியவைகள் இருந்தன. இதுபற்றி அவரிடம் பொதுமக்கள் கேட்ட போது அவர் தான் வள்ளியூர், பொய்காட்டான் குடியிருப்பை சேர்ந்த அன்னபாண்டி(வயது 45) என்றும், கோவிலில் திருட வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பொதுமக்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் கோவிலுக்கு சென்றனர். பொதுமக்கள் அன்னபாண்டியை, போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை அழைத்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டனர். இதுபற்றி போலீசார் விசாரித்த போது, அவரை 15-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து போலீசார் அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மழை பெய்ததால் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் நின்றுள்ளனர்.
அப்போது திடீர் என அன்னபாண்டி தப்பி ஓடி விட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய அன்னபாண்டியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்