என் மலர்
உள்ளூர் செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரிப்பு
- வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
- செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து, கடல் போல் காட்சியளிக்கிறது.
பூந்தமல்லி:
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
இதனால் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக சென்னை புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து பலமடங்கு அதிகரித்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் நீர்வரத்து மணிக்கு 2177 கன அடியாக இருந்து வருகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில், தற்போது 21.04 அடியாகவும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2864 மில்லியன் கனஅடியாகவும் தண்ணீர் உள்ளது.
ஏரிக்கு வரும் மழைநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் ஏரியில் இருந்து 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.
தற்போது வரை நீர் வரத்து அதிகரித்து வருவதால் 2-வது நாளாக நேற்று 114 கனஅடி அளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவும் அதிகரிக்கப்படும் எனவும் ஏரியை கண்காணித்து வருவதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து, கடல் போல் காட்சியளிக்கிறது. மேலும் பாதுகாப்பு பணி யில் போலீசார் ஈடுபட்டுள் ளனர்.






