என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரத்தில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது- வாகன ஓட்டிகள் கடும் அவதி
    X

    தாம்பரத்தில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது- வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்தது.
    • குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் கன மழை பெய்தது. இதனால் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளன. குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தாம்பரம் தண்டவாளம் அடியில் அமைக்கப்பட்டு உள்ள மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் சுரங்கப்பாதை முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மாற்று வழியில் செல்கின்றன.

    மேலும் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மின் மோட்டார்கள் மூலம் சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×