search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
    X

    கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

    • கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
    • கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த அமரம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 27). இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று வேலைக்கு செல்வதாக இருசக்கர வாகனத்தில் அமரம்பேடு பகுதியில் இருந்து சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஐயர் கண்டிகை அருகே திடீரென லாரியில் மோதி காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பயனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×