என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- கொத்தனார் பலி
- ஊத்துக்கோட்டை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
- படுகாயமடைந்த ராஜசேகர், நான்சி, சரவணன், சிவகுமார் ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சரவணன் (வயது 16). அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். மகன் சிவகுமார் (வயது 14). இதில் சரவணன் கூனிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவகுமார் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
நேற்று இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சீதஞ்சேரி புறப்பட்டனர். அம்மம்பாக்கம் மதுக்கடை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே சென்னை பெரம்பூர் மங்கலாபுரம் 3-வது தெருவை சேர்ந்த கொத்தனார் ராஜசேகர் (வயது 54). தனது மகள் நான்சி (23)யுடன் வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது.
இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த ராஜசேகர், நான்சி, சரவணன், சிவகுமார் ஆகியோரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். மற்ற 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பென்னலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்