search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: அக்காள்-தம்பி பலி
    X

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: அக்காள்-தம்பி பலி

    • காக்களூரில் உள்ள மதுபான கடை அருகே திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆவடி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பலத்த காயம் அடைந்த குணசுந்தரியும், முருகனும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே விபத்து ஏற்படுத்திய டிரைவர் காரை அங்கேயே நிறுத்தி விட்டுதப்பி ஓடி விட்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது50). இவர் தனது தம்பி முருகனுடன் (45) திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

    கோவில் விழாவை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    காக்களூரில் உள்ள மதுபான கடை அருகே திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆவடி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த குணசுந்தரியும், முருகனும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே விபத்து ஏற்படுத்திய டிரைவர் காரை அங்கேயே நிறுத்தி விட்டுதப்பி ஓடி விட்டார்.

    அவ்வழியே சென்றவர்கள் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசுந்தரியும், முருகனும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.

    விபத்தில் அக்காள்-தம்பி ஒரே நேரத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×