என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: அக்காள்-தம்பி பலி
- காக்களூரில் உள்ள மதுபான கடை அருகே திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆவடி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் பலத்த காயம் அடைந்த குணசுந்தரியும், முருகனும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே விபத்து ஏற்படுத்திய டிரைவர் காரை அங்கேயே நிறுத்தி விட்டுதப்பி ஓடி விட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது50). இவர் தனது தம்பி முருகனுடன் (45) திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்தார்.
கோவில் விழாவை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை இருவரும் மோட்டார் சைக்கிளில் பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
காக்களூரில் உள்ள மதுபான கடை அருகே திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஆவடி நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த குணசுந்தரியும், முருகனும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். உடனே விபத்து ஏற்படுத்திய டிரைவர் காரை அங்கேயே நிறுத்தி விட்டுதப்பி ஓடி விட்டார்.
அவ்வழியே சென்றவர்கள் படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குணசுந்தரியும், முருகனும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகிறார்கள்.
விபத்தில் அக்காள்-தம்பி ஒரே நேரத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்