என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் மேலாளர் பலி
- திருவள்ளூர்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்தது. இதனால் பதறிப்போன ராஜசேகர் திடீரென பிரேக் பிடித்தார்.
- இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், குப்புசாமி நகர் சிவராஜ் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 30). இவர் திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தாரர்.
நேற்று இரவு ராஜசேகர் வேலை முடிந்ததும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
திருவள்ளூர்- பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்தது. இதனால் பதறிப்போன ராஜசேகர் திடீரென பிரேக் பிடித்தார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜசேகர் திருவள்ளூர்அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






