என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவொற்றியூரில் சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
BySuresh K Jangir14 Oct 2022 9:14 AM GMT
- எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் மண்டல நவீன எரிவாயு தகன மேடை அருகே சண்முகம் சாலையை கடக்க முயன்றார்.
- வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சண்முகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், கிராமத்தெரு, அம்சா தோட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது73). தி.மு.க.வில் முன்னாள் வட்ட செயலாளராக இருந்தார். இவர் நேற்று இரவு 10 மணி அளவில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் மண்டல நவீன எரிவாயு தகன மேடை அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சண்முகம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சண்முகத்தை திருவொற்றியூர் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகம் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தியவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X