என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மிடிப்பூண்டி-சோழவரம் பகுதியில் பருவமழை முன்எச்சரிக்கை ஆலோசனை
    X

    கும்மிடிப்பூண்டி-சோழவரம் பகுதியில் பருவமழை முன்எச்சரிக்கை ஆலோசனை

    • பருவமழை முன்எச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைத்து துறை அதிகாரிகளுடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    பொன்னேரி:

    பருவமழை முன்எச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி, சோழவரம், மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் அடங்கிய அனைத்து துறை அதிகாரிகளுடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதில் வட்டாட்சியர்கள் செல்வகுமார், கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ரவி, குலசேகரன், வாசுதேவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், தீயணைப்பு துறை அலுவலர் சம்பத், வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி பாபு, கால்நடைத்துறை உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×