என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்
- மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.
- சுகாதார ஆய்வாளர்கள் லட்சுமி நாராயணன், அப்துல் வஹாப் கலந்து கொண்டனர்.
மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் கலாவதி தலைமையில் தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், உள்ளிட்ட பணிகள் நடத்து வருகிறது. மாவட்ட பூச்சியியல் வல்லுனர் மதியழகன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல், சளி, இருமல், ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் லட்சுமி நாராயணன், அப்துல் வஹாப் கலந்து கொண்டனர்.
Next Story