என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பள்ளி கட்டிட வரைபடத்தை பார்த்து கோபமடைந்த அமைச்சர்- அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை ரத்து செய்ததால் பரபரப்பு
- பள்ளிக்கு குழந்தைகள் வரும் வாசலை அடைத்தும் அடுத்த கட்டிடங்களை மறைத்தும் இருந்ததை பார்த்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தி தெரிவித்தார்.
- பள்ளிக்கட்டிடங்கள் காற்றோட்டமாக அமைய வேண்டும் என்றும் புதிய வகுப்பறைகள் கட்ட வேறு வரைபடம் தயார் செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை வழங்கினார்.
தக்கலை:
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கல்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.84.25 லட்சத்தில் 5 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருந்தார்.
இதற்காக பள்ளிக்கு வந்த அவர், வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டு, வரைபடம் போடப்பட்ட பகுதியை பார்வையிட்டார். அதில் பள்ளிக்கு குழந்தைகள் வரும் வாசலை அடைத்தும் அடுத்த கட்டிடங்களை மறைத்தும் இருந்ததை பார்த்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தி தெரிவித்தார்.
பள்ளிக்கட்டிடங்கள் காற்றோட்டமாக அமைய வேண்டும் என்றும் புதிய வகுப்பறைகள் கட்ட வேறு வரைபடம் தயார் செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் அவர் அறிவுரை வழங்கினார்.
மேலும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியையும் ரத்து செய்து விட்டு அவர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்