என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை ஆயிரம்விளக்கில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு- அ.தி.மு.க.வினர் போராட்டம்
- சேதமான எம்.ஜி.ஆர்.சிலையை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார்.
- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராமும் நேரில் சென்று பார்த்தார்.
சென்னை:
சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என். செட்டி சாலையில் மார்பளவு எம்.ஜி.ஆர். சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
ஆயிரம் விளக்கு 117-வது வட்டத்தில் எம்.ஜி.ஆர். சிலை கடந்த 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. தொண்டர்களால் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த எம்.ஜி.ஆர். சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். எம்.ஜி.ஆர். சிலையின் மூக்கு பகுதிகள் உடைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து சிலை முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலையை உடைத்தவர்களை கைது செய்ய அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சேதமான எம்.ஜி.ஆர்.சிலையை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று பார்வையிட்டார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராமும் நேரில் சென்று பார்த்தார்.






