என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்ணிவாக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    மண்ணிவாக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கற்பகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ராஜீ தெருவை சேர்ந்தவர் கற்பகவள்ளி (வயது 34). இவருக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவரது வயிற்றில் கட்டி இருந்ததாகவும், இதனால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட கற்பகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×