என் மலர்
உள்ளூர் செய்திகள்

பராமரிப்பு பணி நடப்பதால் பெருங்குடி மயான பூமி மே 14-ந்தேதி வரை மூடல்
- பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (1-ந்தேதி) முதல் 14.05.2023 வரை 45 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது.
- பொதுமக்கள் அருகிலுள்ள அடையாறு மண்டலம், பாரதி நகர், பெசன்ட் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெருங்குடி மயானபூமியின் எரிவாயு தகனமேடையை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திரவ பெட்ரோலிய வாயு தகனமேடையாக மாற்றம் செய்யவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (1-ந்தேதி) முதல் 14.05.2023 வரை 45 நாட்களுக்கு மேற்கண்ட மயானபூமியில் உடல்களை தகனம் செய்ய இயலாது. எனவே பொதுமக்கள் அருகிலுள்ள அடையாறு மண்டலம், பாரதி நகர், பெசன்ட் நகர் மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம் மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






