என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் லாரி டிரைவர் அடித்துக்கொலை
- லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி நேதாஜி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). லாரி டிரைவர்.
இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராஜேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தாக தெரிகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி அன்னை இந்திரா நகரை சேர்ந்த அவரது நண்பர் வீட்டு முன்பு இன்று ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதியினர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி.சந்தீஸ், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், பவுல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அவரது உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது.
இதனால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
அவரது உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்