என் மலர்
உள்ளூர் செய்திகள்

மொடக்குறிச்சி அருகே மது என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த தொழிலாளி பலி
- பூச்சி மருந்தை பிராந்தி என நினைத்து குடித்து விட்டதாகவும இதனால் தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
- மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த பஞ்சலிங்கபுரம், திருவள்ளுவர் தெருவை சேர்த்தவர் சின்னசாமி (50).விவசாய கூலி தொழிலாளி. சின்னசாமிக்கு குடிப்பழக்கமும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி திடீரென வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து விசாரித்த போது குடிபோதையில் இருந்த சின்னசாமி பிராந்தி பாட்டிலில் இருந்த கலைக்கொல்லி பூச்சி மருந்தை பிராந்தி என நினைத்து குடித்து விட்டதாகவும், இதனால் தனக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சின்னச்சாமியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று 2 நாட்களில் சின்னசாமி வீடு திரும்பினார்.
இந்நிலையில் மீண்டும் சின்னச்சாமி வாந்தி எடுத்து உள்ளார். உடல்நிலை மோசமானதையடுத்து அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






