என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூவத்தூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் மூழ்கி முதியவர் பலி
    X

    கூவத்தூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் மூழ்கி முதியவர் பலி

    • வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட தனபால் பரிதாபமாக இறந்தார். முட்புதரில் சிக்கி இருந்த அவரது உடலை போலீசார் மீட்டனர்.
    • கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கூவத்தூர் அடுத்த கடலூரை சேர்ந்தவர் தனபால் (வயது76). கடந்த சிலநாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக பாலாற்றில் வெள்ளம் செல்கிறது. இந்த நிலையில் தனபால் அப்பகுதி பாலாற்று கரையோரத்தில் மாடுகளை மேச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்த போது அவர் தண்ணீரில் விழுந்தார். இதில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட தனபால் பரிதாபமாக இறந்தார். முட்புதரில் சிக்கி இருந்த அவரது உடலை போலீசார் மீட்டனர். இதுகுறித்து கூவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×