search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே மின்சாரம் தாக்கி முன்னாள் பஞ்சாயத்து ஊழியர் பலி
    X

    கன்னியாகுமரி அருகே மின்சாரம் தாக்கி முன்னாள் பஞ்சாயத்து ஊழியர் பலி

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள லீபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்பர் செல்வகுமார் (வயது 74).

    இவர் பஞ்சலிங்கபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஆவார். இவர் இன்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள தோப்புக்கு சென்றார். அப்போது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்தது. இந்த மின்கம்பியை அவர் மிதித்து உள்ளார். இதில் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதனால் மயங்கி நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    உடனே இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×