என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
- பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் காயத்ரி (30).
- காயத்திரி கல்வீசி தாக்கியதில் கொள்ளையர்களில் ஒருவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் காயத்ரி (30).இவர் கொடூர் ஊராட்சியில் நடைபெறும் 100 நாள் வேலை திட்ட பணியின் பொறுப்பாளராக உள்ளார். நேற்று மாலை அவர் கிருஷ்ணாபுரத்தில் இருந்து வெள்ளோடைசெல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென காயத்திரி அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். அப்போது காயத்திரி கல்வீசி தாக்கியதில் கொள்ளையர்களில் ஒருவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






