என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவடி அருகே வங்கி மேலாளர் வீட்டில் நகை கொள்ளை
    X

    ஆவடி அருகே வங்கி மேலாளர் வீட்டில் நகை கொள்ளை

    • வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளைகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருநின்றவூர்:

    திருமுல்லைவாயல், அம்மன் அவென்யூ, ஐயப்பன் நகரை சேர்ந்தவர் ஆனிடாஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் செங்குன்றத்தில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளைகும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×