search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இண்டூர் அருகே மின்சார டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி
    X

    இண்டூர் அருகே மின்சார டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி

    • தாய் முனியம்மாள் பேரில் 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது.இந்த நிலத்தை தனது இளைய மகன் சின்னசாமி பெயருக்கு பத்திரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குள்ளையன்( வயது 75). இவரது மனைவி முனியம்மாள் (68). இவர்களுக்கு முனியப்பன்(50)சின்னசாமி(47) என 2 மகன்களும், ஜம்பேரி(52) என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    இவர்களது தாய் முனியம்மாள் பேரில் 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது.இந்த நிலத்தை தனது இளைய மகன் சின்னசாமி பெயருக்கு பத்திரம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அவரது மூத்த மகன் முனியப்பன் மற்றும் அவரது அக்கா ஜம்பேரி இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலையில் முனியப்பன் எனக்கு சொந்தமான நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் பேரில் சிட்டா மாற்றி விட்டார் என கூறி கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து அதேபகுதியில் உள்ள மின்சார டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து தகவல் இதுகுறித்து தகவல் அறிந்து இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முனியப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய் துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×