search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உதவியாளரின் சகோதரர் வீட்டில் வருமானவரி சோதனை
    X

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உதவியாளரின் சகோதரர் வீட்டில் வருமானவரி சோதனை

    • கே.சி.பி. நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு, துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
    • மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது அவரிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். கடந்த 6-ந்தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6 இடங்களிலும் சோதனை நடந்தது.

    கோவை பீளமேட்டில் கே.சி.பி.நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். இங்கும் வருமானவரித்துறை சோதனை நடந்தது. இதில் கே.சி.பி நிறுவனம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சோதனை முடிவடைந்தது.

    தொடர்ந்து கே.சி.பி நிறுவனம் மற்றும் கொடிசியாவில் உள்ள அதன் இயக்குனர் சந்திரபிரகாஷின் வீட்டிலும் 4-வது நாளாக சோதனை நடைபெற்றது. காலையில் தொடங்கிய சோதனையானது, விடிய, விடிய நடந்தது.

    கே.சி.பி. நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடமும் பல்வேறு கேள்விகளை கேட்டு, துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் சந்திரபிரகாஷின் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது அவரிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இன்று 5-வது நாளாக பீளமேட்டில் உள்ள கே.சி.பி.நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 5 நாட்களாக நடந்து வரும் சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே குனியமுத்தூரில் உள்ள வசந்தகுமார் என்பவரது வீட்டிற்கு நேற்றிரவு 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறையினர் காரில் வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை அடைத்து விட்டு, யாரையும் உள்ளே அனுமதிக்காமல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலையும் தொடர்ந்து வசந்தகுமாரின் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. வீட்டில் அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    வசந்தகுமார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் உதவியாளராக இருக்கும் சந்தோஷ் என்பவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×