என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ரெட்டி தெருவை சேர்ந்தவர் கார்த்திக்.
- வழக்கம் போல் கார்த்திக் மது குடித்து வீட்டுக்கு வந்தார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ரெட்டி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (35). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா.
கார்த்திக்கிற்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தினமும் அவரை மனைவி கண்டித்துள்ளார். ஆனாலும் கார்த்தி தனது போக்கை கைவிடவில்லை.
இந்த நிலையில் வழக்கம் போல் கார்த்திக் மது குடித்து வீட்டுக்கு வந்தார். இதை மனைவி சங்கீதா கண்டித்தார். இதில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த கார்த்திக் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






