search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழிங்கநல்லூரில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது
    X

    சோழிங்கநல்லூரில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர் கைது

    • லட்சுமியின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கும், புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் இருந்தது.
    • புண்ணியவதியின் கழுத்தை முத்து அறுத்தபோது மற்றொரு மகள் சந்திரா தடுத்துள்ளார்.

    வேளச்சேரி:

    சென்னை சோழிங்கநல்லூர் காந்தி நகர் ஏரிக்கரை வசித்து வருபவர் முத்து. இவரது மனைவி புண்ணியவதி(வயது 46). இவர் சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் துப்புரவு வேலை செய்து வந்தார். முத்து கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் லட்சுமி.

    இந்தநிலையில் லட்சுமியின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கும், புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு 7 மணியளவில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த முத்து, மனைவி புண்ணியவதியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். இதில் புண்ணியவதி பரிதாபமாக இறந்தார்.

    புண்ணியவதியின் கழுத்தை முத்து அறுத்தபோது மற்றொரு மகள் சந்திரா தடுத்துள்ளார். அப்பொழுது அவருக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. அவர் காயத்துடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே முத்து தலைமறைவானார்.

    இச்சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய முத்துவை கைது செய்தனர்.

    Next Story
    ×