என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் பழனிபாபா பிறந்த நாள் கூட்டத்தில் மோதல்- வாலிபர் வெட்டி கொலை
    X

    ஓசூரில் பழனிபாபா பிறந்த நாள் கூட்டத்தில் மோதல்- வாலிபர் வெட்டி கொலை

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சர்தாஜ், சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கொத்தூர் சாலையில் உள்ள ஒரு மஹாலில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பழனிபாபா பேரவை சார்பில் அவரது பிறந்த நாளையொட்டி வரலாற்றை விளக்கும் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

    இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து சாப்பிட செல்லும் நேரத்தில் ஓசூர் ராம்நகரை சேர்ந்த சர்தாஜ் (வயது 22), இமாம்பாடாவை சேர்ந்த மகபூப் (30) ஆகிய 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து, சர்தாஜ் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்தார். அவர்கள் அரிவாள், கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள் மகபூப் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

    அப்போது, மகபூப் உடன் வந்தவர்கள், ஆயுதங்களை பறித்து சர்தாஜ் தரப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. 2 தரப்பினரும் மோதிக் கொண்டதில் சர்தாஜ், அவரது நண்பர் பவன் பிரகாஷ் (21), மகபூப் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்களில், தாஜ் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பவன் பிரகாஷ் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மகபூப், மத்திகிரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் டவுன் மற்றும் மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்கள். மோதலுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. 2 தரப்பிலும் காயமடைந்தவர்கள் பலத்த காயங்களுடன் இருப்பதால் முழு விவரங்களும் தெரியவில்லை.

    இந்த நிலையில், பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சர்தாஜ், சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இவர் மெக்கானிக்-ஆக வேலை செய்து வந்தார். இதுகுறித்து அவரது தந்தை பயாஸ் மத்திகிரி போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×