search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
    X

    ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்

    • 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • ஹாலோ பிளாக் கற்கள் ஒன்றிற்கு ரூ. 5 முதல் 6 வரை விலை ஏற்றப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது ஜல்லி, பவுடர் மற்றும் மூலப்பொருட்களின் அதிரடி விலை ஏற்றத்தினால் ஹாலோ பிளாக் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.

    குறிப்பாக ஜல்லியின் விலை சுமார் ஒரு யூனிட்டுக்கு ஆயிரம் வரை உயர்ந்து இருப்பதினால் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறிய லாபம் கூட தற்போது கிடைப்பதில்லை.

    எனவே ஹாலோ பிளாக் விலை நிர்ணயம் பற்றியும் கல்குவாரிகளில் ஜல்லி, பவுடர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க கோரியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதல் ஒரு வார காலம் (7 நாட்கள்) அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

    அதன்படி இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் தங்களது அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதன் காரணமாக இன்று முதல் 7 நாட்களுக்கு ஹாலோ பிளாக் உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறாது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    வேலைநிறுத்தம் காரணமாக நாளொன்றுக்கு ரூ. 10 கோடி வரை ஹாலோ பிளாக் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் , உடனடியாக அரசு கவனம் செலுத்தி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால் ஹாலோ பிளாக் கற்கள் ஒன்றிற்கு ரூ. 5 முதல் 6 வரை விலை ஏற்றப்படும். மேலும் வேலைநிறுத்தத்தால் லட்சக்கணக்காக தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×