என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
- ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 18-வது நாளாக தடை விதித்துள்ளது.
- போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 514 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து 11 ஆயிரத்து 556 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கபினி அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 370 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த 2 அணைகளின் பாதுகாப்பு கருதி இன்றுகாலை 6 மணி நிலவரப்படி 16 ஆயிரத்து 556 கனஅடி உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 18-வது நாளாக தடை விதித்துள்ளது.
போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.