search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலையாளி சதீசுக்கு பலத்த பாதுகாப்பு- சுழற்சி முறையில் போலீஸ் கண்காணிப்பு
    X

    கொலையாளி சதீசுக்கு பலத்த பாதுகாப்பு- சுழற்சி முறையில் போலீஸ் கண்காணிப்பு

    • புழல் சிறையில் சதீசுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • 8 மணி நேரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் போலீசார் மாறி மாறி பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

    சென்னை:

    மாணவி சத்யாவை கொடூரமாக கொலை செய்த கொலையாளி சதீஷ், புழல் சிறையில் அடைக்கப்ட்டுள்ளான். அங்கு சக கைதிகளால் அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று சிறைத்துறை அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். சதீஷ் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ஏற்கனவே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதனை கருத்தில்கொண்டே புழல் சிறையில் சதீசுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 8 மணி நேரத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் போலீசார் மாறி மாறி பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

    சிறையில் சதீஷ் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மாணவி சுவாதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் இருந்தபோதுதான் மின் வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான். அதே பாணியில் சதீசும் தற்கொலை முடிவை எடுத்துவிடக் கூடாதே என்கிற அச்சம் சிறை துறையினருக்கு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சதீசை 24 மணி நேரமும் சிறை காவலர்கள் தொடர்ந்து கண்காணித்தப்படியே உள்ளனர்.

    Next Story
    ×